நெருக்கத்தில் நாம்...
தீண்டல்களின் தீயில்
தகித்துக் கொண்டிருக்கும்
மனங்கள்..!
உன் விரல் கோலத்தால்
உடம்புக்குள் மின்சாரம்...!
தீண்டும் இடங்கள்
தவிர்த்து தீண்டா
இடங்களில் தவிப்பு..!
உலரும் நாவால்
வருடப்பட்டது
உலர்ந்த உதடு..!
உன் நகக் கீறல்களில்
வியர்வை துளிகள் புகுந்து
எரிகின்ற தேகத்திற்கு
எண்ணெய் வார்க்கின்றது..!
இயங்கிக் கொண்டிருக்கும்
உடல்களால் இயக்கம்
மறந்தது இதயம்..!
அறியாப் பருவத்துக்குப் பின்
ஆடைகளின்றி நாம்..!
கூடிக்கலந்த சந்தோசம்
முகத்தில் மட்டுமல்ல
மனதிலும்..!
எழ முயன்றபோது
மீண்டும் என்கிறாய்...
மறுத்தாலும் உன் மடியில்..!