Saturday, 26 May 2012

நீ வருவாய் என... எதிர்காலம் தேடி தொலைதேசத்தில் தொலைந்து போயிருந்தாய் நீ... உன் நினைவில் என்னை தொலைத்து கொண்டிருந்தேன் இங்கே நான்... ஒருநாள் உன்னுடன் வாழ்வேன் என்ற நம்பிக்கையில்... உன் வரவை நோக்கி உன் வழித்தடத்தில் என் விழிகள்... நினைவுகள் மட்டும் நாம் காதலின் சாட்சியாய் நாம் இடையே... அன்பே நீ எப்படி இருக்கிறாய்? இடம் மாறிய இதயங்கள் உன்னையும் துடிக்க வைக்கின்றதா? ஏன் இந்த காதல் வலி? உள்ளங்கள் இணைந்து உடல்களை பிரித்து ஏன் இப்படிஒரு விதியின் விளையாட்டு? உணர்வுகள் உறவாடி கொண்டிருக்க, உடல்கள் தவித்து கொண்டிருகின்றன... என்று தீரும் இந்த தனிமையின் வலி? உன் பிரிவின் துயர் என் விழி வழி கசிந்து என் இரவுகளை நனைகின்றது... என் விடியலாய் நீ வருவாய் என...