Wednesday, 13 October 2010

கவிதைக்கும் எனக்கும் தூரம்...

கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.

பழகினால் புரியும் என்றாள்

பழகினேன் அவள் பேச்சே

கவிதையாய் இருந்தது

ஓ.. இது தான் கவிதையா என்றேன்

இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு

இது வெண்பா என்றாள்

அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்

சீர், தளை, விருத்தம் என்றாள்

கவிதையை முழுதாய் புரிந்தேன்

இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.