Friday, 18 June 2010

அழகிய மழைக்காலம்.......

கடலுக்குள் எத்தனை புயல் வந்தாலும் ஊருக்குள் மழை பெய்தால் உள்ளம் துள்ளச்செய்யும். அப்படி துள்ளியதால் பலர் ஊர் சுற்றி எடுத்த சில படங்கள்.

இப்படி காதலியை அணைத்துக் கொண்டு

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : archlover : D'Art.

மழை முடிந்தும் எழவில்லை துளி

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : D'Art.

மழை பெய்தாலும் நனையாமல் பயணிக்கலாம் நெடுந்தூரம்

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : haleyyellow : D'Art.

மலர்களுக்குத் தான் எத்தனை கொடுப்பினை

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : MartaC : D'Art.

மழை – காமத்தினும் மெலியது

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : grinzekatze : D'Art.

ஓட்டு வீடும் ஓட்டை வண்டியும்

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : D'Art.

நீ ஒருவனாவது வெளியில் வந்தாயே

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : Katarynaa : D'Art.

சீக்கிரம் போக வேண்டும் இல்லையெனில் மழையும் குளிரும் அவளை வாட்டிவிடும்

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : D'Art.

ஓட்டு ஓட்டு மழை காயும் வரை

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : D'Art.

ஏய்… என் வீட்டை உடைத்து என்னை வெளியில் தள்ளி விட்டாய்..you..you.. மழை

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : Aun_Juli : D'Art.

கடமை செய்வோம் – மழையும், நானும்

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : burcindrummer : D'Art.

இன்னும் சரவணா ஸ்டோர் மட்டும் பாக்கி, போய்விட்டுப் போகலாம்…

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : olumdenyoksun : D'Art.

இன்று ஏன் நகரம் இவ்வளவு சீக்கிரம் விழித்துக் கொண்டது

இது ஒரு அழகிய மழைக்காலம்

Thanks : lambofgod1 : D'Art.

முத்தம்!!!!!!!!!!!!!!!!!

முத்தம் ஒன்று தந்தவுடன்

மூடிக்கொள்ளும் கண்கள்…

மொத்தமாக கூந்தல் அள்ளி
மூடிக்கொள்ளும் தோள்கள்…

உடல் இறங்கி நீந்தும் என்னை
உயிர் இழுத்து செல்லும்…

ஓய்வு தந்த காரணத்தால்
உடைகள் நன்றி சொல்லும்,

விரலும் விரலும்
இறுகும் பொழுது

முதுகின் சுவரில்
வழியும் விழுது

உறங்கிடாமல் உறங்கிடாமல்
கிறங்கி விடு,

இதழும் இதழும்
இணையும் பொழுது

இமையில் நிலவு
நுழையும் பொழுது

வசதியாக வசதியாக
வளைந்து கொடு…

புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்…

கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்…

உயிர் அணுக்கள் கூடி நின்று
ஓசை இன்றி கிள்ளும்,

ஒரு நொடிக்குள் நூறு முறை
மெத்தை இங்கு துள்ளும்…

இமையின் முடியால்
உடலை உழவா

இளமை வயலில்
புயலை நடவா

இசைத்திடாமல் இசைத்திடாமல்
மூச்சு விடு….

நீண்ட முத்தம்.........


யாருமற்ற கறுகறுத்த பின்னிரவுகளில்

கவிதை வரிகள் எளிதில் கிடைத்து விடுகின்றன

நீ இருக்கும் இரவுகளின் நீட்சி

நவீனத்துவ விரிப்புகளில் சிக்கி

என்னை ஆகடியம் பண்ணுகிறது

நீண்ட அமைதியில் எப்போதும்

என்னை நோக்கியே முடுக்கி விடுகிறாய்

உனதன்பின் ஸ்பரிசங்களை

தினசரி மதிய உணவிலும்

அடுத்தடுத்த அழை பேசி விசாரிப்புகளிலும்

வேலைக்கு சென்ற காலை பொழுதுகளில்

விரிப்புகளை உதறுகையில் இருக்கலாம்

கடைசி இரவில் நீ கொடுத்த

நீண்ட முத்தமும் ,

எழுதி முடிக்காத சில கவிதை வரிகளும்.