Tuesday, 8 December 2009
காதலில் சில சமயங்கள்...
Tuesday, 24 November 2009
Saturday, 21 November 2009
சதுரங்க போர்க்களம்!!!!!!

எதிரெதிரில் இருவரும் ;
இது மட்டும் நிரந்தரம்...
உடை தளர்த்தி- எனை அழைத்து- படை வளைத்துச் சிறை பிடிக்க
முதல் யாமம் இதழ் யாகம்.
சதுரங்க போர்க்களம்
புதிர் கொண்ட சூட்சமம்
இதழ் பிணைத்து - உடல் அணைத்து- மடை திறக்கத் தடை உடைத்தேன்
அதில் மூழ்கும் யுகம் யாவும்;
தகிக்கின்ற தேகம் ;
உயிர் கொன்ற மோகம்.
யுகம் முழுக்க தவம் கிடந்து;
உன் மடிதவழ உயிர் பிரிந்தால்
சிதை சேரும் என் உடல் வேகும்.
Thursday, 19 November 2009
"அது" வரை பொறு.,
தொட்டு பேசுவதை முற்றும் நிறுத்து.,
புளாங்கிதம் பூட்டு.,
மழை.!!
*உன்னையும், என்னையும்,
ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்கிறது..
மழை.!!
*உன் தேகச்சூட்டில் ஆவியாய் போயின
மழை நனைத்த ஈரம்..
*"ச்சோ" வென பெருமழை
குடைவிரித்தாய் நீ...
குடைமீது கோபம் போல
நின்றுபோனது மழை
*மழைநீரில் காகிதகப்பல்
என்காதல் உரைத்தபடி
உன் வீட்டு முற்றத்தில்..
*மழைபட்டு கரைந்து போனது..
உன் கண்ணிமை மையும்,
நெற்றிப் பொட்டும்
கொஞ்சம் என் மனசும்...
*இடி இடித்தால் இறுக கட்டிக்கொள்கிறாள்..
இன்னும் ஓர் இடியனுப்பேன்..,
அர்ஜுனா..! அர்ஜுனா..!
*கன்னக்குழி நிறைத்து.,
நெஞ்சுக்குழி வழிந்து.,
மோட்சம் பெற்றது...
மழை.!!
*நிலவில் மழை உண்டாம்..
சமீபத்திய ஆராய்ச்சி.,
நிலவே மழையில் நனைந்தது..
அதற்கு நான் சாட்சி.!!
*பேரிடி விழவாய்ப்புண்டாம்...
மின்கம்பி அறுந்து கிடக்கலாம்..
சகதியில் கால் இடரக்கூடும்...
ஆதலால்.,
என்னை இறுக கட்டிக்கொள்ளேன்.
*மழையில் குதுகலித்து
குழந்தையாய் நீ..
உன் இச்சை தனிக்கும் பொம்மையாய்
மழை.!!
*மாலை, மழை, நீ..
வள்ளுவனுக்கு வாய்க்கவில்லை....
உன் காலத்துக்கு கவிஎழுத.!!
*மழைக்கு ஒதுங்கி நிழற்குடையில்
நீ..
சாரலாய் உன் பாதம் நனைத்து
பிறவிப்பயன் அடைந்தது
Monday, 16 November 2009
தொட்டாச் சிணுங்காக் காதல்!!!

பொய்யான கோபங்களும்
சின்னச் சின்ன தாபங்களும்
அதீதமான வியப்புக்களும்
அபத்தமான பேச்சுக்களும்
ஆழமான தேடலும் கொண்ட
நிஜமான காதல் !
இது
நிழல் மனிதர்கள் தொடர்ந்தாலும்
நெருஞ்சி முற்கள் நெருடினாலும்
கருங்கற்கள் இடறினாலும்
காயம்பட்டு நொந்தாலும்
தொடர்ந்து செல்கின்ற
தொட்டாச் சிணுங்காக் காதல் !
அவள் பார்க்கிறாளா என்று அவன் பார்ப்பதையும்
அவன் பார்க்கிறானா என்று அவள் பார்ப்பதையுமே
தமக்குப்
பார்வை கிடைத்ததன்
பயனாக உணர்கிறார்கள் !
மாலையிலே பிரிந்து
மனைக்கு செல்கையில்
மனையில் ஏறி
மாலை சூடும் நாளை நினைத்து ஏங்குகிறார்கள் !
இரவுப் பொழுது
எப்படி நகரப் போகிறது என்று
பயந்து தூங்காமலே தூங்குகிறார்கள் !
அவன் யார் ? அவள் யார் ?
முழுவதும் அறியும் முன்னே
முன்னுரை வரைகிறார்கள் !
தன் வீடு எதிரியின் குகையாகிறது !
தன் சொந்தம் கொடும் பகையாகிறது!
எதிர் பால் நீ இருக்கையிலே
எதிர்ப்பார் தேவையில்லை என்கிறது !
பல்லியைப் பார்த்து அவள்
பயப்படுகையிலே
பல்லியைப் பிடித்து
பயில்வான் பேர் வாங்கி
பல்லிளிக்கத் தோன்றுகிறது !
இத்தனை வருடம் இல்லாமல்
திடீரென்று
காசு கொடுத்து
கிரீட்டிங் கார்டு வாங்கத் தோன்றுகிறது !
கவிதையென்ற பெயரில்
கன்னாபின்னாவென்று
கிறுக்கத் தோன்றுகிறது !
காதல் -
தோணக் கூடாததைஎல்லாம்
தோணச் செய்கிறது !
தோணுவதை எல்லாம்
தேடச் செய்கிறது !
Tuesday, 10 November 2009
ரொமான்ஸ் தேசம்!!!
நான் சும்மா இருந்தாலும்உன் காதல் திசையை நோக்கி
நடக்க செய்யும் என் கால்களின்
அனிச்சை செயலை
என்னவென்று சொல்வது?
சுவர்களை உரசி நிற்காதே..பார்......
அவைகளும் உன்னை நோக்கி
காதல் கடிதம் நீட்டுவதை..

உன் இதழ்களை பார்க்கையில்
இரும்புகளிலும் காதல் மலர்கிறது.
நான் மட்டும் எம்மாத்திரம்?
என் முத்தத்தின் வலி...
கட்டிலும் கண்ணீர் விட்டு அழுகிறது.
நம் சண்டையில் கட்டிலை
அழவைக்கலாமா?
சரி.. சரி.. என் கட்டிலுக்காக
என்னை கொஞ்சம் கட்டியணைத்துக்கொள்..
ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா!!!!!!!

"கொடி இடையாள்" என அழைத்தால்
கோபப்படுவாயே! -இப்படி என் மீது
படர்கையில் என்னவென்று
நான் உன்னை அழைப்பது?
![[3271117_large.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtFqixlszwkL8O0bQnkwdTRhRzMeXlCKBZpYPXmhf46ND6G578xokyrmSt97ue7QmkjHRZ1ehNu5AI_jfXKvbidjul2Wg-U6Jm25-7FuOON8TMPoyYHsm0tst8B82FdKOP1Eiqvja4xV2q/s1600/3271117_large.jpg)
இருள் சூழ்ந்துவிட்டது என
இனிமை!!!!!!!
ஓட்டப்பந்தயம்...
நான், நீ, காதல்…
மூவரும் ஓடிக்கொண்டிருந்தோம்.
எனக்காக நீயும்,
உனக்காக நானும்
விட்டுக்கொடுத்து ஓடுகையில்
காதல் நம்மை வென்று விட்டது.
காதல் மஹால்!!!!!!!
வெறும் மனதோடு பார்ப்பவருக்கு
இது வெறும் சமாதி!
காதலோடு பார்ப்பவருக்கு மட்டும்
தாஜ்மஹால்!
பார்த்தாயா கண்ணே…
காதலில் தான் சமாதி கூட
உலக அதிசயமாகும்!
எல்லாமே உன்னோடு...
கண்களால் கவிதை சொல்
புன்னகையால் கோபப்படு
இதயத்தில் கோலமிடு
அன்பாலே சண்டையிடு
வளையல்களால் வார்த்தை பேசு
அசைவுகளால் நடனமிடு
அழியாத முத்தமிடு
கனவுகளில் சத்தமிடு
மலர்களால் வன்முறை செய்
அமைதியால் அதிகாரம் செய்
பார்வைகளால் ரகசியம் சொல்
விரல்களால் என் விதியை தொடு
அன்பை அறிமுகம் செய்
காதலிக்கக் கற்றுக் கொடு
வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்
ஸ்பரிசங்களால் உயிர் கொடு
சுவாசத்தை மார்கழியாக்கு
இன்பமோ, துன்பமோ
இரண்டிலும் பங்கு கொடு
கல்லறை ஆனாலும் பரவாயில்லை
உன்னருகிலே ஓர் இடம் கொடு
Wednesday, 4 November 2009
இரண்டாம் கருவறை...

வார்த்தைகளால் விவரிக்க முடியாத உனதன்பில் திளைத்திருக்கிறது என் மனச்செடி. போர் தொடுக்கும் என் சுடுசொற்களையும்
சிறு மெளனத்தால் அழகாய் கடந்துவிடும் உனது லாவகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வர்ணங்கள் நிறைந்த மழையை என்னில்
எப்போதும் பொழிந்துபோகும் வெண்மேகம் நீ.
கரம் பற்றிக்கொண்டு கால்கள் மணலில் புதைய கடற்கரையில் என்னோடு நீ நடந்து வருகையில் நினைவுகளில் முகிழ்கிறதென்
கால்சட்டை பருவ நாட்கள். நீண்டதொரு ரயில் பயணத்தில் என் தோள் சாய்ந்துகொண்டு ஜன்னல்வழியே தூரப்பச்சையை ரசித்த
உனது கருவிழிக்குள்தான் நான் துயிலும் இரண்டாம் கருவறை இருக்கிறது.
முத்தங்களால் என் கன்னம் நனைக்கும் உன் எச்சில்கள் - அமுதசுரப்பிகள். சத்தமின்றி எனக்குள் யுத்தமொன்று உருவாகி அடங்கிப்போய்விடும்
உன் கோபத்தருணங்களில். சூழ்நிலை சிறைக்குள் நான் தவிக்கின்றபோதெல்லாம் உன் சாந்தப்பார்வையின் ஞாபகநிலவுகள் என்னில் பொழிந்து என்னை உயிர்ப்போடு வைத்திருக்கும்.
என் நண்பர்கள் வியந்துபோகிறார்கள் எப்படி உனக்கு மட்டும் இரட்டை நிழலென்று. என் ஒற்றை உடலுக்குள்ளிருப்பது இரண்டு உயிர்கள் என்பதை எப்போது உணர்வார்கள்? நமக்கு மட்டுமே தெரிகின்ற சங்கேத வார்த்தையை நான் உச்சரிக்கும் போதெல்லாம் வெட்கத்தில் உன் முகத்தில் விதவிதமாய் பூக்கள் மலரும்.
நிறைந்த ப்ரியங்களுடன் உனக்கென நானெழுதும் கடிதங்களெல்லாம் கவிதைகளாகி விடுகின்றன. கவிதைகளெல்லாம் காதலாக மலர்கின்றன.
உன் உதட்டுச்சுழிப்பிலும் ஒற்றை மருவிலும் கால்சுற்றும் நாய்க்குட்டியாகி போனது என் ஆண்மை.
இவைபோன்ற கனவுகள் எப்போதும் அழகாய்த்தானிருக்கின்றன.
படித்ததில் பிடித்தது!!!!!!

Walking in the moon, Counting the stars,
Beyond the world, I'm searching you.
Thinking about love, Laughing at myself,
Without any words, I'm searching you.
Crying at your absence, Swallowing my sorrows,
To make you happy, I'm searching you.
Flying high in sky, Sailing long in sea,
Mad with your thoughts, I'm searching you.
Hopeing for goodthings, Hopping towards future,
Ever to be with you, I'm searching you.
Finding happy , in Failing before you,
To show my love, I'm searching you.
Waiting for you, Biting my nails,
To make me comfort, I'm searching you.
Longing for your nearness, Throwing away my roughness,
To rest under you, I'm searching you.
Sitting in the shore, Staring at the waves,
To hear your words, I'm searching you.
Sleeping in your lap, Closing my eyes,
To leave this world, I'm searching you....
Until my last breathe...
Tuesday, 3 November 2009
Ennavalin asaikal......
கொட்டும் பனியில்..
நிலவின்
வெளுச்த்தில் ..
சுடும் நெருப்பின் தீ மூட்டலின்
அருகில்..
ஒருவர் அணைப்பில் இன்னொருவரின் நெருக்கத்தில்,....
தீண்டலின்
வெப்பதில் அவளது இளமை கரைய ...
..
அவனிடிதில் அவள்
...அவளுக்குள் அவன் ....
அன்று ....
Thursday, 29 October 2009
அடி கள்ளியே!!!!!
என் மெத்தை தேவதையே!
காதலின் மிச்சமே காமம் என்று நினைத்திருந்தேன்
உன்னை பார்த்ததும் என் நினைப்புகள் மாறுவதும் ஏனோ?????
மோகம் தீர்ந்த மூச்சிரைப்பின் முடிவில்
என் மார்பில் முழுமையாய் நீ!
அந்த பால்நிலவு வெட்கப்பட்டு சிவந்ததடி என் உயிரே!!!!!
கேட்டதும் கொடுத்துவிட்டால் கட்டிலுக்கு அழகில்லையாம்!
யாரோ என்னிடம் பிதற்றினார்கள்
ஆனால் இன்றோ அதை அப்படியே உண்மையக்கிவிடயடி!!!!!
மோகத்தின் வேகத்தில்
நீயும்,நானும் கவனிக்கவில்லையடா!
அந்த மெத்தையும்,கட்டிலும் நம்மை பார்த்து
நமுட்டு சிரிப்பு சிரித்ததை...
உன்னிடமிருந்து விலகி இருக்க நான் நினைத்திருந்த வேளையில்
என் விரல்கள் உன்
கூந்தலில் சிக்கிக்கொண்டிருந்தன!!!!!
பெரிய திருடன் நான் என்றிருந்தேன்,
களவாடிய பிறகே தான் புரிந்தது!
திருடன் நான் இல்லை.
நீதான் திருடி என்று [என்னையும்,என் காதலையும்]!!!!!
அவ்வளவு மிக மிக அருகில் அமர்ந்து கொண்டு
'என்னில் என்ன பிடிக்கும்?' என்றால்
நான் எதை சொல்ல ?
எதை விட ?
ஏன் என்னை இப்படி இம்சிகிறாய்
நான் பாவம் இல்லையா?????
பதில் சொல்லடி என் செல்லத்தின் செல்லமே!!!!!
Tuesday, 6 October 2009
ஏனடி என்னை அழவைக்கிறாய் ??????
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
இத்தனை அழகாய் இருக்கின்றாய் ;
இத்தனை அழகாய் சிரிக்கின்றாய் ;
இத்தனை இத்தனை அழகாய் இருந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
என் உயிரின் ஊடே நீ கலந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
உனக்கென உயிர் தர நான் இருந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
என் உள்ளும் புறமும் நீ இருந்தும்
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
உறவுகள் தவிர்த்தும் ;
உணர்வுகள் தொலைத்தும் ;
நீ “உம் ” என்றால் உயிர் துறக்க நான் இருந்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
தென்றல் தீண்ட வலிக்கு மென்றும் ;
பூவை சூட தலை கணக்கு மென்றும் ;
நடந்தால் பாதம் நோகுமென்றும் ;
இதயத்தில் ரத்தத்தை வெளி ஏற்றி ;
இரு கண்களையும் காவல் வைத்து ;
இரவில் உன்னை தூங்க வைத்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
என் இதழை தலையணை ஆக்கி வைத்தும் ;
என் இரவுகளால் உன்னை போர்த்தி விட்டும் ;
என் மூச்சு காற்றால் மிதப்படுத்தியும் ;
என் கண்ணீரால் உன் தாகம் தீர்த்தும் ;
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
எனக்காய் அழுவதற்கு என் சொந்தம் பலவிருந்தும் ;
உனக்காய்.….
உனக்கு மட்டுமாய்.,,,
ஏனடி என்னை அழவைக்கிறாய் ?
எப்படி மறப்பேன் என்னவளே.?!..

ஊடலின் உச்சத்தில்,
பரிகாச வார்த்தைகள்.!,
கூடலின் மிச்சத்தில்,
கூந்தற் பூ வாசங்கள்.!,
உள்ளங்கை வெட்கத்தில்,
சிவந்து போன மருதாணி.!,
சீலைத்தலைப்பில் என்னை கிடத்தி,
இரண்டாம் தாலாட்டு.!,
கழுத்தூறும் வியர்வைத்துளி
முன்னேறாமல்..,
துடைத்துத்தடுத்த முந்தானை.!,
கதை சொல்லி தூங்கிய பின்னும்
கடைக் கண்ணில் குட்டி விழிப்பு.!,
அக்குளில் அழுக்குப் பதியம்..,
ஆயிரம் பூவாசம்.!,
விரல் பிடித்து நகம் கடிக்கும்
விசித்திரத்தாய்மை.!,
குறுந்தாடி மழித்தெடுக்க.,
நுரை போடும் தோழமை.!,
எழுதிய கவிதையில் பிழைதிருத்தும்
முதல் ரசனை.!,
தேவை தெரிந்து சேவை செயும்
கண் கருணை.!,
நீயழுது நானழுதால் துடைக்கவரும்
பத்துவிரல்.!,
விலகிய நாட்களெல்லாம் விலக்காமல்.,
கட்டியணைத்து தூங்கும் காதல்.!,
தூக்கத்தில் சட்டென விழித்தால்.,
தலைமாட்டில் செருப்புவைக்கும்
பழகிய பாசம்.!,
வாசல் வரைவந்து என்னாடை சரிசெய்து
முத்தமிட்டு வழியனுப்பும்.,
அவசியமான அக்கறை.!,
சனிக்கிழமை எண்ணைக்குளியல்.,
சாப்பாட்டில் கீரைத்துவையல்.,
மதியவுணவு மீதம் வந்தால்
தலையில் குட்டும் இரண்டாம் தாய்மை.!,
ஏகத்துக்கும் என்னைப்புகழும்
என் பக்தை.!,
ஆசைப்பட்டு ஒன்றைக்கேட்டு.,
செலவாகும் வேண்டாமெனும் குடும்பத்தனம்.!,
காயத்திற்கு மருந்து கட்டு.,
நெற்றியில் திருநீற்றுப்பொட்டு.,
இரவெல்லாம் தூங்காமல்..
வைத்தியம் பார்க்கும் பைத்தியக்காரி.!,
என் பசிபோகப்பரிமாறி.,
பட்டினி கிடக்கும் பத்திநித்துவம்.!,
சாக்காலப்படுக்கயிலும் - என்னை
குளிப்பாட்டும் கடைசி செவிலி.!,
எப்படி மறப்பேன் என்னவளே..,
Monday, 5 October 2009
நீ பொக்கிஷம்!!!!!!!!
முடியாமல்
கொட்டிவிடுகிற
கவிதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
நீயோ
`பொறுக்கி` என்று
திட்டுகிறாய்
மற்றவர்களோ
கவிஞன்
என்கிறார்கள்...
அழகு நிரம்பி வழிகிறது கவிதையாய்...
நிரம்பி
வழிகிறது
கவிதையாய்...
நீ என்ன
அழகின்
அட்சய பாத்திரமா
இத்தனை
கவிதைகள்
நிரம்பி
வழிகிறதே....
மயிலிறகு
குட்டி போடுகிறதோ
இல்லையோ
உன் நினைவுகள்
குட்டி போடுகின்றன
கவிதைகளாக....
தெரியாத
தூரத்தில்
நீ இருந்தாலும்
தெரிவித்து
விடுகின்றன
கவிதைகள்....
என் பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...
Sunday, 4 October 2009
ஐம்புலனிலும் அவளை வை!!!!!!!
ஐம்புலனிலும் அவளை வை!
கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும்
இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய்
இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச்
சொல்கிறது திருக்குறள்.
உன் காதலியும் இப்படித்தான்
உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.
ஆனால், அதற்கு முன்…
உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.
கண்களில் அவள் உருவத்தை வை
காதுகளில் அவள் குரலை வை
சுவாசத்தில் அவள் வாசம் வை
உதடுகளில் அவள் பெயரை வை
உணர்வில் அவள் உயிரை வை!
Thursday, 1 October 2009
காதல் செய்துபாருங்கள்!!!!!!!!

காதல் மிகப்புனிதமானது, அதை விளையாடி வீணாக்கிவிடாதீர்கள்
சிறுவயதிலும் சின்னப்பிள்ளைத்தனத்திலும் செய்வது காதலல்ல
காதல் கடலைப்போன்றது
திருமணத்திற்குமுன் செய்யும் காதல்
அதன் கரையை மட்டும்
தொட்டு நிற்க்கவேண்டுமே தவிர, அதன் அலைகளுடன்
விளையாடினால் சுனாமிபோல் சுருட்டிகொண்டு போய்விடும்
திருமணத்திற்குப்பின் வரும் காதல் ...
பேரலைகளையும் தொட்டு கூத்தாடினாலும்
அதனுள் மூழ்கியபோதும் முத்துடன்தான் வருவோமே தவிர
மூச்சடைத்து விடமாட்டோம்
திருமணத்திற்கு பின் காதல் செய்துபாருங்கள்
அதன் ஆழம் தெரியும்,
அதன் அன்பு புரியும்,
அதன் மதிப்பு தெரியும்
காதல் கண்ணியமானது
அதை கலங்கப்படுத்தி விடாதீர்கள்!!
கணவருடன் காதல் செய்து பாருங்கள், காதலுடனே வாழ்ந்துபாருங்கள்!!
நம் வாழ்க்கைக்கு பின்னும் காதல் வாழும்!!
புதிய பார்வை...
இன்று பார்த்த பார்வை
இதுவரை பார்க்கவில்லை!
இன்று தோண்றிய எண்ணம்
இதுவரை தோண்றவில்லை!
இன்று சொன்ன வார்த்தை
இதுவரை சொன்னதில்லை!
உன்னை பற்றி கவிஎழுத
இதுவரை நினைக்கவில்லை!
இன்று எழுத நினைத்தாலும்
வார்த்தைகள் சிக்கவில்லை!
உன்னை கவிதையாய் ரசிக்க
காரணம் தேவையில்லை!
ஆம்… எனக்கு
நீயும் ஒரு கவிதைதான்…
அன்புடன் நான் ரசிக்கும்
அழகான ” HI – KUU ” கவிதை…
காதல் கவிதைகள்......
என் விழியோரம் ஒரு நிழல்
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்..
ஓ.! இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான் என்
வாழ்க்கைதுணை என்று…
—————-***—————-
அடடா !
உன்னிடம் கூடவா மறைத்துவிட்டேன்
என் வயதை..
நான் எப்படியடா சொல்வேன்…
உன்னைச் சந்தித்த நாளில்தான்
பிறந்தேன் என்று…
உன்னைக் கைப்பிடித்த நாளில்தான்
மலர்ந்தேன் என்று…
——————***—————–
இப்படியா பேசுவாய் ?????
சிரிக்கும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் உன்னை நேசிக்கிறேன்” என்கிறாய்
ரசிக்கும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் மிகவும் அழகானவன்” என்கிறாய்
கோபப்படும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் உன்னை பார்க்க வருகிறேன்” என்கிறாய்
பயப்படும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் அருகில்தான் இருக்கின்றேன் ” என்கிறாய்
ஆச்சர்யப்படும்படி ஏதாவது சொல் என்றால்
“நான் உன்னை வெறுக்கின்றேன்” என்கிறாய்
அதிர்ச்சி அடையும்படி ஏதாவது சொல் என்றால்
“நான் உன்னிடம் பேசமாட்டேன்” என்கிறாய்
சந்தோசப்படும்படி ஏதாவது பேசு என்றால்
“நான் அடுத்த ஜென்மத்தில் சொல்கிறேன்” என்கிறாய்
இப்படி பேசும் உன்னிடம் எப்படிதான் பேசுவது..
பேசாமல் இருந்தாலும் ஏதோ ஒன்று
குறைகின்றது.. ஏனெனில்
எனக்கு பிடித்தவர்கள் வரிசையில்
நீயும் இருந்து தொலைக்கின்றாயே..
Wednesday, 30 September 2009
en anbu kathalaney........
மழை நாளொன்றில்.......
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...
2 வயது சிறுவனின்
2 வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
2 வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....
2 நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து 2 வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?
ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...
எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...
மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...
துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....
சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...
மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...
எனக்கான தீர்ப்புகள்........
என்னைப் பற்றி.
எதையும் பற்றாமல்
எதைப்பற்றியும் இல்லாமல்
என்னைப் பற்றிக்கொண்டு எழுதியாகவேண்டும்.
எனக்கு மட்டும் தெரிந்த
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
நீ
நான்
நாம்
அவர்கள்
அனைத்திற்குமான தீர்ப்புகள்
எழுதியே தீர வேண்டும்.
உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?
உன்னோடு இருந்திருப்பேன்…
உன்னோடு இருந்திருப்பேன்…
சுகம் தரும் உலகம் தான்,பல நண்பர்கள் என்னோடு,
விரும்பிய நேரமெல்லாம் விளையாட்டு தான்;
இருந்தென்ன பயன்
உன் சுட்டு விரல் தீண்டலின்றி?
உன் கணினியாய் நானிருந்திருந்தால்
உன் ஸ்பரிசமாவது கிடைத்திருக்கும்….
காதல் என்ன மாய உலகமா??????
என் இந்த ஏக்கம் , இத்தனை தவிப்பு ??
இத்தனை வருடங்கள் எங்கே இருந்தன என் ஆசைகள்.....???!!!
அழகில் நீ தேவதை,
அன்பில் நீ ராட்சசி,
காதலில் நீ கவிதை,
கவிதையில் நீ காவியம்,
மொத்தத்தில் நீ அழகு ஓவியம்!!!!!!
உன் பார்வையில் என் மேல் பாசங்கள்,
உன் நேர்மையில் என் மேல் நேசங்கள்.....
உன் காதலினால்தான் இன்று நான்!!!!!
இதோ கனவினில் தொலைந்த உன்னை மீட்க
உன் உயிரில் கலந்திட ஓடோடி வருகிறேனடி என் அழகான ரத்சஸியே.......

























