Thursday, 29 October 2009

அடி கள்ளியே!!!!!

என்னைத் தழுவி என் மோகத்தை அலைகழித்த
என் மெத்தை தேவதையே!

காதலின் மிச்சமே காமம் என்று நினைத்திருந்தேன்
உன்னை பார்த்ததும் என் நினைப்புகள் மாறுவதும் ஏனோ?????

மோகம் தீர்ந்த மூச்சிரைப்பின் முடிவில்
என் மார்பில் முழுமையாய் நீ!
அந்த பால்நிலவு வெட்கப்பட்டு சிவந்ததடி என் உயிரே!!!!!

கேட்டதும் கொடுத்துவிட்டால் கட்டிலுக்கு அழகில்லையாம்!
யாரோ என்னிடம் பிதற்றினார்கள்
ஆனால் இன்றோ அதை அப்படியே உண்மையக்கிவிடயடி!!!!!

மோகத்தின் வேகத்தில்
நீயும்,நானும் கவனிக்கவில்லையடா!
அந்த மெத்தையும்,கட்டிலும் நம்மை பார்த்து
நமுட்டு சிரிப்பு சிரித்ததை...

உன்னிடமிருந்து விலகி இருக்க நான் நினைத்திருந்த வேளையில்
என் விரல்கள் உன்
கூந்தலில் சிக்கிக்கொண்டிருந்தன!!!!!

பெரிய திருடன் நான் என்றிருந்தேன்,
களவாடிய பிறகே தான் புரிந்தது!
திருடன் நான் இல்லை.
நீதான் திருடி என்று [என்னையும்,என் காதலையும்]!!!!!

அவ்வளவு மிக மிக அருகில் அமர்ந்து கொண்டு
'என்னில் என்ன பிடிக்கும்?' என்றால்
நான் எதை சொல்ல ?
எதை விட ?

ஏன் என்னை இப்படி இம்சிகிறாய்

நான் பாவம் இல்லையா?????

பதில் சொல்லடி என் செல்லத்தின் செல்லமே!!!!!

No comments:

Post a Comment