என் விழியோரம் ஒரு நிழல்
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்..
ஓ.! இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான் என்
வாழ்க்கைதுணை என்று…
—————-***—————-
அடடா !
உன்னிடம் கூடவா மறைத்துவிட்டேன்
என் வயதை..
நான் எப்படியடா சொல்வேன்…
உன்னைச் சந்தித்த நாளில்தான்
பிறந்தேன் என்று…
உன்னைக் கைப்பிடித்த நாளில்தான்
மலர்ந்தேன் என்று…
——————***—————–
No comments:
Post a Comment