அழகு
நிரம்பி
வழிகிறது
கவிதையாய்...
நீ என்ன
அழகின்
அட்சய பாத்திரமா
இத்தனை
கவிதைகள்
நிரம்பி
வழிகிறதே....
மயிலிறகு
குட்டி போடுகிறதோ
இல்லையோ
உன் நினைவுகள்
குட்டி போடுகின்றன
கவிதைகளாக....
தெரியாத
தூரத்தில்
நீ இருந்தாலும்
தெரிவித்து
விடுகின்றன
கவிதைகள்....
என் பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...
No comments:
Post a Comment