ஐம்புலனிலும் அவளை வை!
கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும்
இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய்
இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச்
சொல்கிறது திருக்குறள்.
உன் காதலியும் இப்படித்தான்
உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.
ஆனால், அதற்கு முன்…
உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.
கண்களில் அவள் உருவத்தை வை
காதுகளில் அவள் குரலை வை
சுவாசத்தில் அவள் வாசம் வை
உதடுகளில் அவள் பெயரை வை
உணர்வில் அவள் உயிரை வை!
No comments:
Post a Comment