
"கொடி இடையாள்" என அழைத்தால்
கோபப்படுவாயே! -இப்படி என் மீது
படர்கையில் என்னவென்று
நான் உன்னை அழைப்பது?
சாவி கொடுப்பது போல்... என் காதைத்திருகி
உன் விளையாட்டை ஆரம்பிக்கிறாய்..
ஆனால் கடைசியில்
"ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா"
என்ற பெயர் மட்டும் எனக்கு....
என் புகைப்படக்கருவிக்கூட
பணி செய்ய மறுக்கிறது...![[3271117_large.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtFqixlszwkL8O0bQnkwdTRhRzMeXlCKBZpYPXmhf46ND6G578xokyrmSt97ue7QmkjHRZ1ehNu5AI_jfXKvbidjul2Wg-U6Jm25-7FuOON8TMPoyYHsm0tst8B82FdKOP1Eiqvja4xV2q/s1600/3271117_large.jpg)
இருள் சூழ்ந்துவிட்டது என
நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
சற்று உற்றுப்பார்....
சூரியன் தன் ஓரக்கண்ணால்
நம்மை ரசித்துக்கொண்டிருப்பதை.....


No comments:
Post a Comment