Thursday, 19 November 2009

மழை.!!



*உன்னையும், என்னையும்,

ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்கிறது..

மழை.!!




*உன் தேகச்சூட்டில் ஆவியாய் போயின

மழை நனைத்த ஈரம்..





*"ச்சோ" வென பெருமழை

குடைவிரித்தாய் நீ...

குடைமீது கோபம் போல

நின்றுபோனது மழை




*மழைநீரில் காகிதகப்பல்

என்காதல் உரைத்தபடி

உன் வீட்டு முற்றத்தில்..




*மழைபட்டு கரைந்து போனது..

உன் கண்ணிமை மையும்,

நெற்றிப் பொட்டும்

கொஞ்சம் என் மனசும்...




*இடி இடித்தால் இறுக கட்டிக்கொள்கிறாள்..

இன்னும் ஓர் இடியனுப்பேன்..,

அர்ஜுனா..! அர்ஜுனா..!




*கன்னக்குழி நிறைத்து.,

நெஞ்சுக்குழி வழிந்து.,

மோட்சம் பெற்றது...

மழை.!!




*நிலவில் மழை உண்டாம்..

சமீபத்திய ஆராய்ச்சி.,

நிலவே மழையில் நனைந்தது..

அதற்கு நான் சாட்சி.!!




*பேரிடி விழவாய்ப்புண்டாம்...

மின்கம்பி அறுந்து கிடக்கலாம்..

சகதியில் கால் இடரக்கூடும்...

ஆதலால்.,

என்னை இறுக கட்டிக்கொள்ளேன்.




*மழையில் குதுகலித்து

குழந்தையாய் நீ..

உன் இச்சை தனிக்கும் பொம்மையாய்

மழை.!!




*மாலை, மழை, நீ..

வள்ளுவனுக்கு வாய்க்கவில்லை....

உன் காலத்துக்கு கவிஎழுத.!!




*மழைக்கு ஒதுங்கி நிழற்குடையில்

நீ..

சாரலாய் உன் பாதம் நனைத்து

பிறவிப்பயன் அடைந்தது

No comments:

Post a Comment