மூடிக்கொள்ளும் கண்கள்…
மொத்தமாக கூந்தல் அள்ளி
மூடிக்கொள்ளும் தோள்கள்…
உடல் இறங்கி நீந்தும் என்னை
உயிர் இழுத்து செல்லும்…
ஓய்வு தந்த காரணத்தால்
உடைகள் நன்றி சொல்லும்,
விரலும் விரலும்
இறுகும் பொழுது
முதுகின் சுவரில்
வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல்
கிறங்கி விடு,
இதழும் இதழும்
இணையும் பொழுது
இமையில் நிலவு
நுழையும் பொழுது
வசதியாக வசதியாக
வளைந்து கொடு…
புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்…
கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்…
உயிர் அணுக்கள் கூடி நின்று
ஓசை இன்றி கிள்ளும்,
ஒரு நொடிக்குள் நூறு முறை
மெத்தை இங்கு துள்ளும்…
இமையின் முடியால்
உடலை உழவா
இளமை வயலில்
புயலை நடவா
இசைத்திடாமல் இசைத்திடாமல்
மூச்சு விடு….
No comments:
Post a Comment