Sunday, 26 September 2010

சில வார்த்தைகள், பல மௌனங்கள் ...

உயிர் வலிக்கும்போதும்
உள்ளம் அழும்போதும்
உனக்காக புன்னகை செய்யும் இதழ்களையும்
மறைக்கத் தெரியாத மௌனத்தையும்
என்ன செய்வேன் ?
உள்ளத்து உணர்ச்சிகளெல்லாம்
ஒன்று சேர்ந்து
என் உயிரைப் பறிக்கும்முன்பு
ஒருமுறை எதிரில் வந்துவிடு
உண்மையெல்லாம் சொல்லிவிடுகிறேன் !!!

No comments:

Post a Comment