ஞாயிறு காலையில்
நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும்
ஒரு முத்தம் என
மூன்று முத்தம் மட்டும் தரும்
கொடுமைகாரி நீ.
——-0O0———-
எப்போதோ நீ எழுதிய
என் பேனாவில்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
உன் வாசனையை
——-0O0———-
எதற்கு பார்த்தாய் என்கிறாய்
சும்மாதான் என்கிறேன்
என்னை சும்மா சும்மா பாத்திட்டே
இருக்க மாட்டயா டா
என காதல் பேசி
திரியும் இந்த அழகு
பிசாசை என்ன செய்வது?
——-0O0———-
மோகமுற்ற பொழுதுகளில்
குகுருப்பாய்
ஒரு பார்வை பார்த்து
மடியில் கிடத்தி
கொஞ்சுவாயே
அதில் சுருண்டு விழுந்து
மரித்து போனவன் நான்
——–0O0———-
எனக்கு இரண்டே ஆசை தான்
உன்னை காதலிப்பது
மற்றும்
உன்னை இன்னும்
அதிகதிமாய் காதலிப்பது
——-0O0———-
உன்னை வம்புக்கிழுத்து
கோபமுட்டி மன்னிப்பு
கேட்கும் இரவுகளில்
வழிந்த கண்ணீரை
துடைத்துக்கொண்டு
இறுக்கி அணைப்பாயே
அதில் உடைந்து போனவன் நான்
——-0O0———-
காலை முதல்
பேசாமல் சண்டைபிடித்து
சாயந்திரம் வீடு திரும்பி
போன் போட்டு
சும்மானாச்சுக்கும் கால் பண்ண
என்று சொல்லும் போதே
கொட்டி விடுகிறது
உன் காதலெல்லாம்
——-0O0———-
சிரித்துக்கொண்டே சிறைபிடிக்கும்
சிறகற்ற யட்சி நீ
தவித்துக்கொண்டே சிறைபடும்
வீழ்த்தப்பட்ட யட்சன் நான்
——-0O0———-
இரவில் இறுக்கி முடிய விழிகளுக்குள்
புகுந்து நர்த்தனம் ஆடிவிட்டு
ஒன்னும் தெரியாத மாதிரி
சாலையில் என்னை கடந்து
செல்கிறாய்
——-0O0———-
நீ காட்டும் உதட்டுச்சுழிப்பில்
கவிதை பொறுக்கிக்கொண்டிருக்கும்
எத்தன் நான்
——-0O0———-
என்னை உன கூடவே வெச்சுக்க்கோடா
என சொல்லும் ஒவ்வொரு கணமும்
என்னை உனக்குள் வைத்துகொள்கிறாய்
No comments:
Post a Comment